என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுற்றுச் சூழல் மந்திரியை நாளை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்கின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்18 Jan 2017 6:40 PM GMT (Updated: 18 Jan 2017 6:40 PM GMT)
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் மந்திரியை தமிழக பா.ஜ.க. பிரதிநிதிகள் நாளை சந்தித்து பேச உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாயத்தில் சந்தித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு குறித்த கோரிக்கை மனுவை பொன்.ராதாகிருஷ்ணனிடம் இளைஞர்கள் வழங்கினர்.
இந்த சந்திப்பிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. பிரதிநிதிகள் மத்திய சுற்றுச் சூழல் மந்திரியை நாளை ( வெள்ளிக்கிழமை) சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் பங்கேற்கின்றார்கள்.
பிரதமரை சந்திக்க தொடர் முயற்சி மேற்கொள்கிறேன். பீட்டா அமைப்பை பற்றி பேசுவதை அவமானமாக கருதுகிறேன். இளைஞர்கள் நியாயமான முறையில் போராடி வருகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள் குழுவினர் தங்களது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாயத்தில் சந்தித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு குறித்த கோரிக்கை மனுவை பொன்.ராதாகிருஷ்ணனிடம் இளைஞர்கள் வழங்கினர்.
இந்த சந்திப்பிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. பிரதிநிதிகள் மத்திய சுற்றுச் சூழல் மந்திரியை நாளை ( வெள்ளிக்கிழமை) சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் பங்கேற்கின்றார்கள்.
பிரதமரை சந்திக்க தொடர் முயற்சி மேற்கொள்கிறேன். பீட்டா அமைப்பை பற்றி பேசுவதை அவமானமாக கருதுகிறேன். இளைஞர்கள் நியாயமான முறையில் போராடி வருகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள் குழுவினர் தங்களது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X