என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு நாளைமுதல் விடுமுறை
Byமாலை மலர்18 Jan 2017 2:45 PM GMT (Updated: 18 Jan 2017 2:45 PM GMT)
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
சென்னை:
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர். இருட்டத் தொடங்கி விட்டதால் தற்போது செல்போன் ஒளியில் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் போராடி வருகின்றனர். இதேபோல இளைஞர்கள் பலரும் தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எனினும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து போராடுவோம் என மெரினாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர். இருட்டத் தொடங்கி விட்டதால் தற்போது செல்போன் ஒளியில் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் போராடி வருகின்றனர். இதேபோல இளைஞர்கள் பலரும் தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எனினும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து போராடுவோம் என மெரினாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X