என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
பாகூர்:
புதுவை கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். (வயது 37). சமையல் தொழிலாளி. இவருக்கு கலையரசி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட புஷ்ப ராஜ் சமையல் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
அது போல் நேற்று மாலையும் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கலையரசி தினமும் இது போன்று வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது? என்றும், இதுபோன்று குடித்து விட்டு வந்தால் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் கண்டித்து விட்டு வெளியே சென்றார்.
மனைவி திட்டியதால் மனவேதனை அடைந்த புஷ்பராஜ் வீட்டின் முன் பக்க கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய கலையரசி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது கணவன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்