search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை
    X

    திருவண்ணாமலையில் கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை

    திருவண்ணாமலையில் கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தூக்குபோட்டு இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கோட்டாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது45). வேலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்தார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சேகர் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×