search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீட்டா ஆதரவாளர்கள் தேச துரோகிகள்: எச்.ராஜா ஆவேசம்
    X

    பீட்டா ஆதரவாளர்கள் தேச துரோகிகள்: எச்.ராஜா ஆவேசம்

    பீட்டா அமைப்பு, அமெரிக்க பெரும் நிறுவனங்களின் கைக்கூலி. முக்கியமாக அந்த அமைப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் அனைவருமே தேச துரோகிகள் என்று எச்.ராஜா ஆவேசமாக பேசினார்.
    சென்னை:

    காரைக்குடியில் பாரதீய ஜனதா செயல் தலைவர் எச்.ராஜா  நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்னை குறித்து ஸ்டாலின் தெரிவித்து வரும் கருத்துக்கள் நேர்மையற்றது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களைத் திட்டமிட்டு பாலைவனமாக்கியது தி.மு.க. அரசு தான். காவிரியில் தமிழகத்தின் பங்கினை பெறுவதற்காக தொடரப்பட்ட வழக்கை, எம்.ஜி.ஆர். அளித்த ஊழல் புகாரை காட்டி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மிரட்டியதால், முதல்வராக இருந்த கருணாநிதி வாபஸ் பெற்றார்.

    முக்கியமாகக் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்துக்குக் கையெழுத்திட்டதே, தி.மு.க. தற்போது ஆட்சியை இழந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    ஜல்லிக்கட்டு பிரச்னையில் நீதிமன்றத்துக்கு எதிராகத் தமிழக அரசு செயல்பட முடியாது நிலை உள்ளது, ஜல்லிக்கட்டு நடத்த நான் தயாராகவே உள்ளேன். பீட்டா அமைப்பு, அமெரிக்க பெரும் நிறுவனங்களின் கைக்கூலி. முக்கியமாக, அந்த அமைப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் அனைவருமே தேச துரோகிகள்.

    கலாச்சார பண்பாட்டை அழித்தும், விவசாயம் சார்ந்த முறையை மாற்றியும், பெட்ரோலியம் சார்ந்த முறையாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே பீட்டாவின் நோக்கம் என்று அவர் கூறினார்.
    Next Story
    ×