என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி
கோவை:
கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்தவர் குட்டப்பன் (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குட்டப்பன் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இது குறித்து வசந்தகுமரி ஒத்தபாலம் போலீசில் கணவரை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்து இருந்தார்.
இந்தநிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா எஸ்டேட் நீராற்றில் ஒருவர் பிணமாக கிடப்பதாக வால்பாறை போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த குட்டப்பன் என்பது தெரிய வந்தது. பின்னர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து குட்டப்பன் உடலை அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்