search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் பயிர் கருகியதால் கரும்பு விவசாயி அதிர்ச்சியில் மரணம்
    X

    தாராபுரத்தில் பயிர் கருகியதால் கரும்பு விவசாயி அதிர்ச்சியில் மரணம்

    தாராபுரத்தில் பயிர் கருகியதால் கரும்பு விவசாயி அதிர்ச்சியில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது எம்.ஜி.ஆர். நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக கொளிஞ்சிவாடியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு விவசாயம் செய்து வந்தார்.

    தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் வறண்டுபோனது. இதனால் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. நீர் பாய்ச்ச முடியாததால் கரும்பு பயிர்கள் கருகின.

    இந்தநிலையில் நேற்று சுப்பிரமணி வயல்காட்டுக்கு சென்றார். கருகிய கரும்புத்தோட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி சுப்பிரமணி தோட்டத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    இந்த சம்பவம் மற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×