search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே மூதாட்டியின் கண்களை கட்டி 9 பவுன் தங்க நகைகள் கொள்ளை
    X

    திருச்சி அருகே மூதாட்டியின் கண்களை கட்டி 9 பவுன் தங்க நகைகள் கொள்ளை

    திருச்சி அருகே மூதாட்டியின் கண்களை கட்டி 9 பவுன் தங்க நகையை பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி கள்ளர் தெருவில் வசிப்பவர் சாரதா (வயது 75). இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் சாரதா தனியாக முசிறியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் சாரதா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் திடீரென சாரதாவின் வீட்டிற்குள் புகுந்தார்.

    இதனை சற்றும் எதிர்பாராத சாரதா யார் நீங்கள் என்று கேட்டார். ஆனால் அந்த வாலிபர் பதில் ஏதும் கூறாமல் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவரது கண்களை ஒரு துணியால் கட்டினார். வாயிலும் துணியை திணித்துள்ளார்.

    இதில் பயந்து போன சாரதா சத்தம் போடமுடியாமல் இருந்த நிலையில் முக மூடி அணிந்த வாலிபர் சாரதாவின் கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடினார்.

    பின்னர் வாயிலிருந்த துணியை அகற்றிய சாரதா சத்தம் போட்டார். இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்தனர். அப்போது, தான் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை முடிமூடி அணிந்திருந்த வாலிபர் பறித்துக்கொண்டு ஓடி விட்டதாக சாரதா தெரிவித்தார்.

    இது குறித்து சாரதா முசிறி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×