என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே மூதாட்டியின் கண்களை கட்டி 9 பவுன் தங்க நகைகள் கொள்ளை
Byமாலை மலர்10 Jan 2017 4:34 AM GMT (Updated: 10 Jan 2017 4:34 AM GMT)
திருச்சி அருகே மூதாட்டியின் கண்களை கட்டி 9 பவுன் தங்க நகையை பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி கள்ளர் தெருவில் வசிப்பவர் சாரதா (வயது 75). இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் சாரதா தனியாக முசிறியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் சாரதா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் திடீரென சாரதாவின் வீட்டிற்குள் புகுந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத சாரதா யார் நீங்கள் என்று கேட்டார். ஆனால் அந்த வாலிபர் பதில் ஏதும் கூறாமல் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவரது கண்களை ஒரு துணியால் கட்டினார். வாயிலும் துணியை திணித்துள்ளார்.
இதில் பயந்து போன சாரதா சத்தம் போடமுடியாமல் இருந்த நிலையில் முக மூடி அணிந்த வாலிபர் சாரதாவின் கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடினார்.
பின்னர் வாயிலிருந்த துணியை அகற்றிய சாரதா சத்தம் போட்டார். இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்தனர். அப்போது, தான் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை முடிமூடி அணிந்திருந்த வாலிபர் பறித்துக்கொண்டு ஓடி விட்டதாக சாரதா தெரிவித்தார்.
இது குறித்து சாரதா முசிறி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி கள்ளர் தெருவில் வசிப்பவர் சாரதா (வயது 75). இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் சாரதா தனியாக முசிறியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் சாரதா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் திடீரென சாரதாவின் வீட்டிற்குள் புகுந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத சாரதா யார் நீங்கள் என்று கேட்டார். ஆனால் அந்த வாலிபர் பதில் ஏதும் கூறாமல் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவரது கண்களை ஒரு துணியால் கட்டினார். வாயிலும் துணியை திணித்துள்ளார்.
இதில் பயந்து போன சாரதா சத்தம் போடமுடியாமல் இருந்த நிலையில் முக மூடி அணிந்த வாலிபர் சாரதாவின் கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடினார்.
பின்னர் வாயிலிருந்த துணியை அகற்றிய சாரதா சத்தம் போட்டார். இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்தனர். அப்போது, தான் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை முடிமூடி அணிந்திருந்த வாலிபர் பறித்துக்கொண்டு ஓடி விட்டதாக சாரதா தெரிவித்தார்.
இது குறித்து சாரதா முசிறி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X