search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகிரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலன் கைது
    X

    சிவகிரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலன் கைது

    சிவகிரி அருகே கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் சுகன்யா (வயது17). (பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (19). என்பவரும் சுகன்யா படித்த கல்லூரியில் படித்து வந்தார்.

    கல்லூரிக்கு செல்லும் போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிந்ததும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் மணிகண்டன், சுகன்யாவை கடந்த 8-ந்தேதி திருச்செந்தூருக்கு அழைத்து சென்றார். அங்கு காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் சுகன்யாவை காணாமல் தவித்த அவர்களது பெற்றோர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் சுகன்யாவை, மணிகண்டன் கடத்தி சென்றதாக கூறியிருந்தனர்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். சுகன்யாவை மீட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×