என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு: புயலாக மாற வாய்ப்பு
சென்னை:
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கு 1180 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளது.
அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் 24 மணி நேரத்தில் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
இது வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புயலின் நிலை, நகரும் பாதை தீவிரமாக கண் காணிக்கப்படுகிறது.
மேலும் தென் மேற்கு வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்