search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி. சி-36
    X

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி. சி-36

    பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
    சென்னை:

    பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2003-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-1, 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 3-வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த செயற்கைகோள் திட்டமிட்டப்படி துருவப்பகுதியின் குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில், பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் இன்று (புதன்கிழமை) காலை 10.24 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

    இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் நேற்றிரவு 10.25 மணிக்கு தொடங்கி இன்று காலை 10.24 மணிக்கு நிறைவடைந்த உடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×