search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுடன் சேர்ந்து ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்த அண்ணன் மகன் தீபக்
    X

    சசிகலாவுடன் சேர்ந்து ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்த அண்ணன் மகன் தீபக்

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அவரது அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார், சசிகலாவுடன் இணைந்து இறுதிச்சடங்கு செய்தார்.
    சென்னை:

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு  காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று வைக்கப்பட்டது. நாடு முழுவதிலும்  இருந்து வந்த பல்வேறு தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் மற்றும்0 பொதுமக்கள் அஞ்சலி  செலுத்தினர். 

    இதையடுத்து, அவரது உடல் ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    முன்னதாக முப்படை  வீரர்கள் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதும் சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்போது  ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் இளைஞர் ஒருவரும் இறுதிச்சடங்கு செய்தார். அவர் யார்? என்று பலருக்கு தெரியாமல்  இருந்தது. அவர் சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக்காக இருக்கலாம் என்று நினைத்தனர்.  

    இந்நிலையில், சசிகலாவுடன் இறுதிச்சடங்குகள் செய்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக்  ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக தீபக்கின் சகோதரியான தீபா, ராஜாஜி அரங்கத்தில் ஜெயலலிதாவின்  உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 
    Next Story
    ×