search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்கு கேரள கவர்னர் - முதல்வர், உம்மன் சாண்டி நேரில் அஞ்சலி
    X

    ஜெயலலிதாவுக்கு கேரள கவர்னர் - முதல்வர், உம்மன் சாண்டி நேரில் அஞ்சலி

    மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு கேரள கவர்னர், முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்களும், பல்வேறு தலைவர்களும் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அவ்வகையில், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தடைந்தனர்.
    Next Story
    ×