என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை
பாகூர்:
புதுவை கிருமாம்பாக்கம் காலனி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது54). இவர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடைய இவருக்கு நீரழிவு நோயும் இருந்து வந்தது.
இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். அதிகம் மது குடித்து வந்ததாலும் நீரிழிவு நோய் பாதிப்பினால் நாராயணசாமி கடும் அவதி அடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த நாராயணசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் துங்கிய நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நாராயணசாமிக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்