search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன் பேச்சு
    X

    காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன் பேச்சு

    காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
    காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் மாவட்டம் என்.புதூரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பொதுவுடைமை கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் நீரேற்று பாசன சங்க விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழர் தேசிய கட்சித்தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது:–

    தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது என 1884–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்தனர். அச்சட்டம் இப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை.

    தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளிமாநிலங்களில் விற்கப்படுகிறது. ஆறுகளில் மணல் அள்ளப்படுவதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரிஆற்றில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம் பாதிக்கும். எனவே தமிழக அரசு, காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் காவிரி ஆற்றை பார்வையிட்டு கொண்டிருந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் அண்ணாவேலு, விசுவநாதன் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
    Next Story
    ×