என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன் பேச்சு
Byமாலை மலர்27 Oct 2016 5:51 PM GMT (Updated: 27 Oct 2016 5:52 PM GMT)
காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் மாவட்டம் என்.புதூரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பொதுவுடைமை கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் நீரேற்று பாசன சங்க விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழர் தேசிய கட்சித்தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது:–
தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது என 1884–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்தனர். அச்சட்டம் இப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளிமாநிலங்களில் விற்கப்படுகிறது. ஆறுகளில் மணல் அள்ளப்படுவதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரிஆற்றில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம் பாதிக்கும். எனவே தமிழக அரசு, காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் காவிரி ஆற்றை பார்வையிட்டு கொண்டிருந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் அண்ணாவேலு, விசுவநாதன் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
அப்போது தமிழர் தேசிய கட்சித்தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது:–
தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது என 1884–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்தனர். அச்சட்டம் இப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளிமாநிலங்களில் விற்கப்படுகிறது. ஆறுகளில் மணல் அள்ளப்படுவதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவிரிஆற்றில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம் பாதிக்கும். எனவே தமிழக அரசு, காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் காவிரி ஆற்றை பார்வையிட்டு கொண்டிருந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் அண்ணாவேலு, விசுவநாதன் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X