search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே கொளத்தூர் மணி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி
    X

    சேலம் அருகே கொளத்தூர் மணி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி

    சேலம் அருகே கொளத்தூர் மணி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தம்பதி பலியாகினர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயா(38). இவர்களுக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.

    இன்று மதியம் ராஜேந்திரனும் அவரது மனைவி விஜயாவும் மோட்டார் சைக்கிளில் மேட்டூரில் வசிக்கும் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தனர்.

    மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடி என்ற இடத்தில் சென்றபோது குறுக்கே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் திடீரென புகுந்தார்.

    இதனால் நிலைதடுமாறி ராஜேந்திரன் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி வந்த கார் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் வேகமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் துடிதுடித்து பலியாகினர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 பேருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெற்றோர் உடலை பார்த்து மகள்கள், மகன்கள் கதறி அழுதது அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

    ராஜேந்திரன் மூத்த மகள்கள் 2 பேர் துணி ஏற்றிமதி (கார்மென்ஸ்) நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். ஒரு மகளும், 2 மகன்களும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து சம்பவம் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×