search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு: வாலிபர் கைது
    X

    குலசேகரன்பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு: வாலிபர் கைது

    குலசேகரன்பட்டினத்தில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வீரபாண்டியன். இவர் சம்பவத்தன்று உடன்குடி பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த சிவமுருகன் (வயது27), செட்டியாபத்து கோடீஸ்வரன் (22) ஆகி யோரை மறித்து சப்-இன்ஸ் பெக்டர் ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது சிவமுருகன், கோடீஸ்வரன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ் பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் சிவமுருகனை கைது செய்தனர். தப்பியோடிய கோடீஸ்வரனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×