search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயம்
    X

    சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயம்

    சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் பெருமாம்பட்டியை அடுத்த சின்ன கஞ்சமலை, அருகே உள்ள கணவாய்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வெங்கடேஷ் (16).இவன் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.

    நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற அவன், மாலையில் வெகு நேரமான பிறகும் வீடு திரும்பவில்லை. அவன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×