search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுத்தமல்லியில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
    X

    சுத்தமல்லியில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

    சுத்தமல்லியில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி மீனா கலைசெல்வி(வயது 43). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இசக்கி(30). இவர் கடைக்கு செல்வதற்காக மீனா கலைசெல்வியிடம் மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு உண்டானது.

    இதில் ஆத்திரம் அடைந்த இசக்கி, மீனா கலைசெல்வியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினாராம். இதுபற்றி சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கியை கைது செய்தனர்.

    Next Story
    ×