search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்றவர் கைது
    X

    கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்றவர் கைது

    சோழத்தரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்றவரை கைது செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சோழத்தரம் அருகே வடக்குபாளையங்கோட்டை கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சோழத்தரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வடக்குபாளையங்கோட்டை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த பக்கிரிநாதன் (வயது 45) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பக்கிரிநாதனை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×