search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
    X

    அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

    2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு, அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

    அந்த வகையில் 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திரு நாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து இந்த விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×