என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்21 Oct 2016 5:09 PM GMT (Updated: 21 Oct 2016 5:09 PM GMT)
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காதல்ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் கீர்த்தனா (வயது 23). இவர் பி.ஏ. இளங்கலை பட்டப்படிப்பை முடித்து உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், கீர்த்தனாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி சேலம் மாவட்டம் தலைவாசலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள திருமண பதிவாளரிடம் திருமணத்தை பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காதல் ஜோடியினர் நேற்று பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் கீர்த்தனா (வயது 23). இவர் பி.ஏ. இளங்கலை பட்டப்படிப்பை முடித்து உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், கீர்த்தனாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி சேலம் மாவட்டம் தலைவாசலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள திருமண பதிவாளரிடம் திருமணத்தை பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காதல் ஜோடியினர் நேற்று பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X