search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
    X

    நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காதல்ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் கீர்த்தனா (வயது 23). இவர் பி.ஏ. இளங்கலை பட்டப்படிப்பை முடித்து உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், கீர்த்தனாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி சேலம் மாவட்டம் தலைவாசலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள திருமண பதிவாளரிடம் திருமணத்தை பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காதல் ஜோடியினர் நேற்று பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×