search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனை சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் தமிழக ஆளுநர்
    X

    மருத்துவமனை சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் தமிழக ஆளுநர்

    தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் இன்று மலை 6.40 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாலை 6.40 மணியளவில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் (பொறுப்பு) மருத்துவமனைக்கு வந்தார். இதனால் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    உள்ளே சென்ற கவர்னர் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் 7.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×