என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்1 Oct 2016 2:42 AM GMT (Updated: 1 Oct 2016 2:42 AM GMT)
மத்திய அரசு மேற்கொண்டுவந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை:
மத்திய அரசு மேற்கொண்டுவந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை ஈடுபட்டு இருந்த மத்திய அரசு, இந்த பணியை தற்போது மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது. மாநில அரசின் இ-சேவை மையங்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் இந்த பணி நடக்க இருக்கிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. 7 கோடியே 21 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 7 கோடியே 7 லட்சம் பேருக்கு (98.10 சதவீதம்) பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து 6 கோடியே 48 லட்சம் பேருக்கு (89.83 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) தமிழக அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் கீழ் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு மேற்கொண்டுவந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை ஈடுபட்டு இருந்த மத்திய அரசு, இந்த பணியை தற்போது மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது. மாநில அரசின் இ-சேவை மையங்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் இந்த பணி நடக்க இருக்கிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. 7 கோடியே 21 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 7 கோடியே 7 லட்சம் பேருக்கு (98.10 சதவீதம்) பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து 6 கோடியே 48 லட்சம் பேருக்கு (89.83 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) தமிழக அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் கீழ் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X