search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
    X

    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு

    திருவையாறு அருகே நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்

    திருவையாறு:

    திருவையாறு அருகே பெரும்புலியூர் வடக்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மனைவி தங்கமணி(65) இவர் கடந்த 28-ம் தேதி மதியம் பெரும்புலியூருக்கு செல்ல கல்லணை சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார் தில்லைஸ்தானம் அரசமரம் பஸ்டாப் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து மருவூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேம்பு, பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் வைரவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×