என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளுக்கு விஷமாத்திரை கொடுத்து விட்டு வாலிபர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்29 Sep 2016 5:33 PM GMT (Updated: 29 Sep 2016 5:33 PM GMT)
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளுக்கு விஷமாத்திரை கொடுத்து விட்டு, வாலிபரும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி. அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களுக்கு லாவண்யா (6) என்ற மகளும், நரேஷ (4) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீளாத சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று சரவணன், தனது இரு குழந்தைகளுடன் கூலிப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமிதரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை (விஷ மாத்திரை) குளிர் பானத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, தானும் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு விஷ மாத்திரை கொடுத்து விட்டு, வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி. அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களுக்கு லாவண்யா (6) என்ற மகளும், நரேஷ (4) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீளாத சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று சரவணன், தனது இரு குழந்தைகளுடன் கூலிப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமிதரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை (விஷ மாத்திரை) குளிர் பானத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, தானும் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு விஷ மாத்திரை கொடுத்து விட்டு, வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X