search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலத்தில் பால் வியாபாரி லாரி மோதி பலி
    X

    தாரமங்கலத்தில் பால் வியாபாரி லாரி மோதி பலி

    தாரமங்கலத்தில் மொபட் மீது லாரி மோதியதில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 4-வது வார்டு குறவன்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன்(வயது 56). பால் வியாபாரி. இவர் வீடு, வீடாக சென்று பால் வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

    இவர் இன்று காலை 7 மணியளவில் மொபட்டில் தாரமங்கலம் ஆதிதிராவிடர் சமூகத்துக்கு சொந்தமான சுடுகாடு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பெரியண்ணன் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தை கேள்விப்பட்டதும், சுற்றப்புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    Next Story
    ×