search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் பலி
    X

    சாத்தான்குளம் அருகே விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் பலி

    சாத்தான்குளம் அருகே ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோரம் இருந்த தென்னந்தோப்புக்குள் புகுந்தது. இதில் டிரைவர் பலியானார்.

    சாத்தான்குளம்:

    சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நோக்கி நேற்று இரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டிசென்றார்.

    அந்த பஸ் சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தென்னந்தோப்புக்குள் புகுந்தது.

    இதில் பஸ் டிரைவர் ரமேஷ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×