என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் பீகார் வாலிபர் கொலையில் 2 பேர் கைது
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது நிசாம் (வயது40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வந்தார். குடும்பத்துடன் கரைப்புதூர் பகுதியில் குடியிருந்தார். தனியார் பனியன் கம்பெனியில் ஒப்பந்ததார ராக பணியாற்றி வந்தார். இவருடைய ஏற்பாட்டில் அதே கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுதீஷ் சக்கரவர்த்தி உள்பட பலர் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவதன்று முகமது நிசாம் சம்பள பணத்தை தான் அழைத்து வந்த நபர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அசாமை சேர்ந்த இம்ரான், சுதீஷ் சக்கர வர்த்தி, ஆகியோருக்கும் முகமது நிசாமுக்கும் இடையே சம்பளம் பணம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது இம்ரான், சுதீஷ் சக்கரவர்த்தி மற்றும் அக்பர், சைதூல் ஆகிய 4 பேரும் சேர்ந்து கட்டையால் முகமது நிசாமை தாக்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து இம்ரான், சுதீஷ் சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்