என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பள்ளத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் உதயன் நகரைச் சேர்ந்தவர் விக்டர். இவரது மனைவி விஷாலி (வயது30).
இவர், தனது குழந்தையுடன் கடைக்கு சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், வீதியில் நடந்து சென்ற போது, 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், விஷாலியை நிறுத்தி ஒரு முகவரியை காண்பித்து கேட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த முகவரி பேப்பரை வாங்கி, விஷாலி பார்த்தார். அப்போது அந்த 2 பேரும் திடீரென கத்தியை எடுத்து அவரை மிரட்டினர்.
இதனை கண்டு விஷாலி அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என தெரியாமல் அவர் விழித்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் 2 பேரும், விஷாலியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பள்ளத்தூர் போலீசில், விஷாலி புகார் செய்தார். அதில் கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் என குறிப்பிட்டு உள்ளார்.
இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்