search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரகேரளம்புதூர் அருகே வாலிபர் தற்கொலை
    X

    வீரகேரளம்புதூர் அருகே வாலிபர் தற்கொலை

    வீரகேரளம்புதூர் அருகே மூல நோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி என்ற ரமேஷ் (வயது 35).

    இவர் மூல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த ரமேஷ் மூல நோய்க்கு கொடுத்த அனைத்து மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×