search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி
    X

    தேனி அருகே இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி

    தேனி அருகே இழப்பீட்டு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

    தேனி:

    தேனி அருகே கூடலூரை சேர்ந்த சுப்புராஜ் கடந்த 2012-ல் அப்பகுதியில் அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் சாந்தி இழப்பீடு கோரி உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாந்திக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2.50 லட்சம் வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

    ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி முழுத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    அதேபோல் கொடைக்கானலை சேர்ந்த ராமன் மற்றும் குருசாமி உள்ளிட்ட 3 பேருக்கு முறையாக இழப்பீட்டு தொகை கிடைக்காத நிலையில், கம்பம் பஸ்நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

    Next Story
    ×