என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி
Byமாலை மலர்27 Sep 2016 7:12 AM GMT (Updated: 27 Sep 2016 7:12 AM GMT)
தேனி அருகே இழப்பீட்டு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
தேனி:
தேனி அருகே கூடலூரை சேர்ந்த சுப்புராஜ் கடந்த 2012-ல் அப்பகுதியில் அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் சாந்தி இழப்பீடு கோரி உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாந்திக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2.50 லட்சம் வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி முழுத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல் கொடைக்கானலை சேர்ந்த ராமன் மற்றும் குருசாமி உள்ளிட்ட 3 பேருக்கு முறையாக இழப்பீட்டு தொகை கிடைக்காத நிலையில், கம்பம் பஸ்நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X