என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
90 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கவுன்சிலிங்
Byமாலை மலர்25 Sep 2016 8:11 AM GMT (Updated: 25 Sep 2016 8:11 AM GMT)
அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 81 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட 90 இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை:
அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 81 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட 90 இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 90 எம்.பி.பி.எஸ். இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் 81 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளும், 9 இடங்கள் கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நாளை (26-ந்தேதி) நடக்கிறது. ஓமாந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.
சேலத்தில் உள்ள அன்னபூர்ணா சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 75 இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 64 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 139 எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் 3 பல் மருத்துவ இடங்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 440 பல் பட்டபடிப்பு இடங்கள் ஆகியவற்றுக்கு வருகிற 28-ந்தேதி கலந்தாய்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 81 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட 90 இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 90 எம்.பி.பி.எஸ். இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் 81 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளும், 9 இடங்கள் கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நாளை (26-ந்தேதி) நடக்கிறது. ஓமாந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.
சேலத்தில் உள்ள அன்னபூர்ணா சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 75 இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 64 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 139 எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் 3 பல் மருத்துவ இடங்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 440 பல் பட்டபடிப்பு இடங்கள் ஆகியவற்றுக்கு வருகிற 28-ந்தேதி கலந்தாய்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X