search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்னை எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.40 மணிக்கு புறப்படும் திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06004), மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

    மறுமார்க்கமாக சென்னையில் இருந்து 28-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-திருச்சி இந்த சிறப்பு ரெயில் (06003), மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×