search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கொலை செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பி ஓட்டம்
    X

    மனைவியை கொலை செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பி ஓட்டம்

    வேடசந்தூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பி ஓடினார்.

    திண்டுக்கல்:

    வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). பூண்டு வியாபாரி. இவருக்கும் பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளி (27) என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 18-ந் தேதி தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடவே தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அய்யப்பன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    உடல்நிலை சற்று தேரவே திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் இன்று அழைத்து வந்தனர். திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே வந்த போது அய்யப்பன் திடீரென போலீஸ் பிடியில் இருந்த தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை பிடிக்க போலீசார் முயன்றும் முடியவில்லை. இதனால் நகர் முழுவதும் போலீசார் உஷாபடுத்தப்பட்டு அய்யப்பனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×