search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரம்பட்டி நால்ரோடு அருகே மயங்கி கிடந்தவர் பரிதாப பலி: போலீசார் விசாரணை
    X

    சூரம்பட்டி நால்ரோடு அருகே மயங்கி கிடந்தவர் பரிதாப பலி: போலீசார் விசாரணை

    சூரம்பட்டி நால்ரோடு அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆட்டோ ஸ்டேண்டு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் அரசு ஆஸ்பத்திரி வளாகம் முன் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்பு லன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவரும் யார்-எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது பற்றியும் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×