என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தபால் உறை: இலவச ஆம்புலன்ஸ் வேன்- மாற்று திறனாளிகள் 10 பேருக்கு ஸ்கூட்டி
Byமாலை மலர்24 Sep 2016 9:57 AM GMT (Updated: 24 Sep 2016 9:57 AM GMT)
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 81-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு தபால் உறை, இலவச ஆம்புலன்ஸ் சேவை, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 81-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிறப்பு தபால் உறை வெளியீடு, இலவச ஆம்புலன்ஸ் வழங்குதல், மாற்று திறனாளிகள் 10 பேருக்கு ஸ்கூட்டி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார் ஏற்பாடு செய்து இருந்தார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெங்கடேஷ்வரலு வெளியிட்டார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தினந்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் ரீஜென்ட் புனித சூசை அறநிலையத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் ஊர்தியை கவிஞர் பொன்னடியான் வழங்கினார். அதை அறநிலைய நிர்வாகி எல்சான் பெற்றுக் கொண்டார்.
நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 10 பேருக்கு ஸ்கூட்டிகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 81-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிறப்பு தபால் உறை வெளியீடு, இலவச ஆம்புலன்ஸ் வழங்குதல், மாற்று திறனாளிகள் 10 பேருக்கு ஸ்கூட்டி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார் ஏற்பாடு செய்து இருந்தார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெங்கடேஷ்வரலு வெளியிட்டார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தினந்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் ரீஜென்ட் புனித சூசை அறநிலையத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் ஊர்தியை கவிஞர் பொன்னடியான் வழங்கினார். அதை அறநிலைய நிர்வாகி எல்சான் பெற்றுக் கொண்டார்.
நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 10 பேருக்கு ஸ்கூட்டிகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X