என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாணாவரம் பகுதியில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
நெமிலி:
பாணாவரம் அடுத்த மாலைமேடு கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனித்தனியே 4 வீடுகள் உள்ளன. இதில் வசிப்பவர்கள் ஆண்கள் விவசாய கூலிவேலைக்கும் பெண்கள் நூறு நாள் வேலை திட்ட வேலைக்கும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை இங்கு வசிப்பவரில் ஒரு வீட்டை சேர்ந்த முனுசாமி (வயது 32) இவரது மனைவி மீனா (வயது23). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காலையில் வேலைக்கு சென்றுவிட்டனர். மீனா மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, கொலுசு மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.
இதே போல் அருகில் உள்ள மேலும் 3 வீடுகளில் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் சிதறிக்கிடந்தன. அவர்களது வீட்டில் இருந்த முக்கிய ஆவனங்கள், 1 பவுன் நகை திருடப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.
இதுகுறித்து பாணாவரம் போலீசில் முனுசாமி புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 வீட்டில் பொருட்கள் இல்லாததால் விரக்தியடைந்த கொள்ளையர்கள் அவர்கள் எடுத்து சென்ற ஆவணங்கள் முள்புதரில் வீசி சென்றுள்ளனர்.
இதனை கண்டெடுத்த அப்பகுதி மக்கள் ஆவனங்களை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்