search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே தென்னை நார் ஆலையில் பயங்கர தீ விபத்து
    X

    தேனி அருகே தென்னை நார் ஆலையில் பயங்கர தீ விபத்து

    தேனிஅருகே தென்னை நார் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் எரிந்து நாசமானது.

    தேனி:

    தேனி அருகே கருக்கோடையில் கோம்பை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீர் என தீ பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் மற்ற பகுதிக்கும் பரவியது. இதனால் நெருப்பு கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த அவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.உடனே கம்பம் பகுதியில் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. அவர்களும் இணைந்து தீயை போராடி அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×