என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே தென்னை நார் ஆலையில் பயங்கர தீ விபத்து
Byமாலை மலர்23 Sep 2016 10:48 AM GMT (Updated: 23 Sep 2016 10:48 AM GMT)
தேனிஅருகே தென்னை நார் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் எரிந்து நாசமானது.
தேனி:
தேனி அருகே கருக்கோடையில் கோம்பை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீர் என தீ பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் மற்ற பகுதிக்கும் பரவியது. இதனால் நெருப்பு கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த அவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.உடனே கம்பம் பகுதியில் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. அவர்களும் இணைந்து தீயை போராடி அணைத்தனர்.
ஆனாலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X