என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கனூர் அருகே விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை
Byமாலை மலர்22 Sep 2016 10:27 AM GMT (Updated: 22 Sep 2016 10:27 AM GMT)
திருக்கனூர் அருகே விஷம் குடித்து தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே தமிழக பகுதியான பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மகள் மகேஷ் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
மகேசுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாமல் அவ்வப்போது மகேசுக்கு அவஸ்தை அளித்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஷ் கூனிச்சம்பட்டில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதித்தது. இதனால் மனம் உடைந்த மகேஷ் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சு கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மகேஷ் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கனூர் அருகே தமிழக பகுதியான பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மகள் மகேஷ் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
மகேசுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாமல் அவ்வப்போது மகேசுக்கு அவஸ்தை அளித்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஷ் கூனிச்சம்பட்டில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதித்தது. இதனால் மனம் உடைந்த மகேஷ் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சு கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மகேஷ் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X