search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    X

    அரியலூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

    அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணி மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் பணியினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், பணிகளை நேர்த்தியாக மேற்கொள்ளத் தேவையான ஆலோசனையை வழங்கினார்.

    அப்பொழுது அக்குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடியிருப்பினை சுற்றி சுற்றுசுவர் அமைத்துத்தர கோரினர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் எதிர்வரும் திங்கட்கிழமை பூமி பூஜையிட்டு சுற்றுசுவர் அமைக்கும் பணியினை துவங்கிட ஆலோசனை வழங்கினார்.

    எருத்து காரன் பட்டி ஊராட்சியிலிருந்து அரியலூர் இரயில்வே நிலையத்திற்கு செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் சாலைப் பணியினை பார்வையிட்ட கலெக்டர், ஒருமாத காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். கோவிந்தபுரம் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதை பார்வையிட்ட கலெக்டர், பஞ்சாயத்து நிதியி லிருந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்டு எதிர்வரும் புதன்கிழமை பூமி பூஜையிட்டு பணிகளை துவங்குவதற்கு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி , ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட செயற்பொறியாளர் செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×