என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இன்று பிறந்த நாள்: ரங்கசாமிக்கு தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து
புதுச்சேரி:
முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாளை என்.ஆர். காங்கிரசார் மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடினார்கள்.
தனது பிறந்த நாளையொட்டி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை புத்தாடை அணிந்து தனது பெற்றோர் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டார்.
இதையடுத்து அவர் தனது வீட்டின் வராண்டாவில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார். இதற்காக புதுவை முழுவதும் இருந்து அதிகாலை முதலே தொண்டர்கள் ரங்கசாமிக்கு வாழ்த்து கூற அவரது வீட்டுக்கு அணி, அணியாக திரண்டு வந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மேள தாளத்துடன் சென்று ரங்கசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும், கேக் வெட்டியும் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே. ஜெயபால், டி.பி.ஆர். செல்வம், திருமுருகன், அசோக் ஆனந்து, சுகுமாறன், கோபிகா, சந்திர பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், நேரு, புஸ்சி ஆனந்து, தேனீ.ஜெயக்குமார், தமிழ்ச்செல்வன், முன்னாள் வாரிய தலைவர்கள் பால முருகன், பாஸ்கர், லூயி கண்ணையா, ஞானசேகரன், வேல்முருகன், ரேவதி பற்குணம், மதி, ராஜேஷ், பாண்டியன், ரகு என்ற முனுசாமி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் குமரகுரு, சுகுமாறன், பொன்.ராஜேந்திரன், பிரகாஷ்குமார், தயாளன், ராஜ்பவன் கோபிநாத், என்.ஆர்.ராஜா, அனிபால் நேரு, வீரபத்திரன், தனசேகரன், சஞ்சய், அண்ணாமலை ஓட்டல் செண்பகராஜன், ராஜா டிரேடர்ஸ் பாஸ்கரன், ராஜசேகர், போரக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் திருமால், அன்னை அன்கோ சரவணன், சுரேஷ், சிவாஜி மன்ற தலைவர் மாயன், ஆடிட்டர்கள் வெங்கடேசன், மணி, ரமணபுரம் என்.எஸ்.ஜெ. ஜெய்குமார், சண்முகாபுரம் எழிலன், பிள்ளை தோட்டம் கார்த்திகேயன், குரும்பாபேட் குணசேகரன், கதிர்காமம் குமரகுரு, பெரிய காலாப்பட்டு முருகன், உமாபதி, ராதாகிருஷ்ணன் நகர் வேல்முருகன், தட்சிணா மூர்த்தி நகர் பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக ரங்கசாமி நீடூழி வாழ வேண்டி என்.ஆர். காங்கிரசார் மாநில பொதுச் செயலாளர் பாலன் தலைமையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் வாரிய தலைவர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் தொகுதி தோறும் என்.ஆர். காங்கிரசார் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கியும் ரங்கசாமி பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்