search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களின் காவல் நீட்டிப்பு: மன்னார் நீதிமன்றம் உத்தரவு
    X

    ராமேசுவரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களின் காவல் நீட்டிப்பு: மன்னார் நீதிமன்றம் உத்தரவு

    13 மீனவர்களின் காவலை 28–ந்தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த மே மாதம் 20–ந்தேதி மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த 9–ந்தேதி 6 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14–ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து 13 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களது காவல் முடிவடைந்ததையொட்டி இன்று மன்னார் நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின் 13 மீனவர்களின் காவலை 28–ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Next Story
    ×