search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?
    X

    கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

    கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் கூந்தல் வறண்டு உதிரத்தொடங்கும். கோடை காலத்தில் இயற்கை முறையில் கூந்தலை எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.
    கோடை வந்து விட்டால் தலைமுடிக்கும் தலைமீது நேரே தாக்கும் வெயிலால் தலைக்கும். பிரச்சினைகள் அதிகம் இருக்கத்தான் செய்யும். ஆக தலையை பாதுகாப்பது என்பது அவசியம்.

    * வெளியில் செல்லும் பொழுது குடை, தலையைச்சுற்றிய துணி, தொப்பி இவை சிறந்த பாதுகாப்பாக அமையும்.

    * தலையை இறுக்க பின்னவோ. கொண்டை போடவோ செய்யாதீங்கள், லூசான முடி அதிக வியர்வை சேர்வதை தடுக்கும்.

    * மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள். தலைக்கு தினமும் நீர் ஊற்றலாம். ஆனால் தினமும் ஷாம்பூ என்பது வேண்டாம்.

    * ஈரத்தலையினை இயற்கையாய் துண்டு கொண்டு துடைத்து உலர விடுங்கள்.

    * மிகச்சிறிதளவு சன் ஸ்கீரின் தலைக்கு கூடத்தடவலாம்.

    * சுடு நீரை தலையில் ஊற்றாதீர்கள் சருமத்திற்காக.

    * சற்று கூடுதலாகவே நீர் குடியுங்கள்.

    * தர்பூஸ், எலுமிச்சை, மாதுளை இவைகளை நன்கு உபயோகியுங்கள்.



    * ‘காய்கறி சாலட்’ மிகுந்த நன்மைதரும்.

    * முகத்தில் பன்னீர் தடவுங்கள்.

    * தயிர், வெள்ளரிசாறு கலந்து முகத்தில் தடவுங்கள்.

    * எலுமிச்சை,கொத்தமல்லி, புதினா ஜூஸ் குடியுங்கள்.

    * சிறுகுழந்தைகளை சற்று கூடுதல் கவனத்துடன் தான் கோடையில் நாம் பாதுகாக்க வேண்டும்.

    * கொளுத்தும் வெயிலில் குழந்தையை வெளியில் எடுத்துச்செல்வதை தவிருங்கள்.

    * தலை, உடம்பினை பருத்தி துணியில் நன்கு போர்த்தி சில நிமிடங்களில் அதனை நன்கு தளர்த்தி விடுங்கள்.

    * பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

    * இரு வேளை கூட குளிக்க வைக்கலாம்.

    * சிறு பிரச்சினை என்றாலும் அலட்சியம் செய்யாது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

    * தொப்பி,குடை இவற்றினை வெளியில் செல்லும் போது பயன்படுத்துங்கள்.

    * நீர் வற்றாமல் இருக்க வயதிற்கேற்ப எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
    Next Story
    ×