என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா
Byமாலை மலர்27 July 2017 7:31 AM GMT (Updated: 27 July 2017 7:31 AM GMT)
வட இந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் பஞ்சாபி தட்டை பயறு மசாலா. இன்று இந்த தட்டை பயறு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தட்டை பயறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய - 2
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, வேக வைத்து, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 10 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தட்டை பயறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய - 2
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, வேக வைத்து, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 10 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X