search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி
    X

    வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி

    பழனி பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
    பேரீச்சை - 20
    காய்ந்த திராட்சை - கால் கப்
    தேன் - 1/2 கப்,
    நெய் - 2 டீஸ்பூன்
    வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
    பனங்கற்கண்டு - கால் கப்
    ஏலக்காய் - 2


    செய்முறை :


    * பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    * வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    * வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும்.

    * கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும்.

    * சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி.

    * இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.



    குறிப்பு :

    * கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம்.

    * வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×