என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்
Byமாலை மலர்12 May 2017 10:04 AM GMT (Updated: 12 May 2017 10:04 AM GMT)
பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
காய்ச்சிய பால் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
செய்முறை :
* முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
* பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும்.
* சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
காய்ச்சிய பால் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
செய்முறை :
* முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
* பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும்.
* சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X