search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

    பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 1/2 கப்
    உளுந்தம் பருப்பு - 1/2 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    காய்ச்சிய பால் - 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    முந்திரி, பாதாம் - தேவையான அளவு



    செய்முறை :

    * முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.



    * அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    * பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும்.

    * சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×