search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி
    X

    சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

    பேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    பெரிய வெங்காயம் - 3
    வெள்ளை பூண்டு - 20 பல்
    பச்சை மிளகாய் - 7
    புதினா - 1 கட்டு
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - தேவைகேற்ப
    தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப
    உப்பு - தேவைகேற்ப
    தேங்காய் பால்  - 1 3/4 பங்கு

    தாளிக்க  :

     
    பட்டை,
    லவங்கம்,
    கிராம்பு,
    ஏலக்காய்,
    அன்னாசி பூ,
    கல் பாசி


     
    செய்முறை  :

    * புதினா, கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
     
    * ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
     
    * கழுவி 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்..

    * பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.
     
    * குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.

    * சூடான சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.
     
    * இதற்கு சிக்கன் கிரேவி நல்லதொரு சைட்டிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×