search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

    உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த பட்டூரா சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ஆலு பட்டூராவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்,
    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா அல்லது கோதுமை மாவு மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).

    * பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.

    * ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

    * ஆலு பட்டூரா ரெடி.

    குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×