என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்
Byமாலை மலர்20 April 2017 7:32 AM GMT (Updated: 20 April 2017 7:33 AM GMT)
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு கத்தரிக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - அரைக் கிலோ
எண்ணெய் - தேவைக்கு.
மசாலாவிற்கு :
முழு பூண்டு - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* கத்திரிக்காயை நன்கு கழுவு துடைத்து வட்ட துண்டு வடிவில் நறுக்கி வைக்கவும்.
* பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சோள மாவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு அகலமான நான்ஸ்டிக் பேனில் அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கவனமாக மசால் தடவிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
* ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேகவிடவும். இரு புறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும். உடனே பரிமாறினால் கிரிஸ்பாக இருக்கும். பொரித்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
* சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரிய கத்திரிக்காய் - அரைக் கிலோ
எண்ணெய் - தேவைக்கு.
மசாலாவிற்கு :
முழு பூண்டு - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* கத்திரிக்காயை நன்கு கழுவு துடைத்து வட்ட துண்டு வடிவில் நறுக்கி வைக்கவும்.
* பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சோள மாவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு அகலமான நான்ஸ்டிக் பேனில் அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கவனமாக மசால் தடவிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
* ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேகவிடவும். இரு புறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும். உடனே பரிமாறினால் கிரிஸ்பாக இருக்கும். பொரித்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
* சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X